பழங்காலக் கல்வி முறை-6
கோயில் கட்டும் கலையில் உலகிலேயே மிகவும் தேர்ச்சிபெற்றவர்கள் தமிழர்கள் என்றும் , இந்தியாவிலேயே நிகரற்ற பெருமை வாய்ந்த கோயில் தஞ்சை பெரிய கோவில் என்றும் ஆங்கிலக் கலைக் களஞ்சியம் என்ற தொகுப்பு நூலில் காணப்படுவது காய்தல் உவத்தல் இன்றி வெளியிடப் பெற்றிருக்கும் கருத்தே ஆகும் என்று காலஞ்சென்ற அறிஞர் பி.ஸ்ரீ. கூறுவார்.
அரசர்களின் அரண்மனையைத்தான் கோயில் என்ற சொல் ஆதியில் குறித்திருக்க வேண்டும். பின்பு இது தெய்வ வழிப்பாட்டிற்குரிய இடங்களைக் குறிக்கலாயிற்று. சிற்ப நூல் வல்லுநர் கோயில்களையம் மண்டபங்களையும் மாட மாளிகைகளையும் உயர்ந்த மாடங்களல் அடுக்கு வீடுகளையும் நில முற்றங்களையும் தங்கள் கலைத்திறன் தோன்ற அமைத்தர் என்று நெடுநெல்வாடை தெரிவிக்கின்றது. சிறந்த அறிஞர்களான ஓவிய மணிகள் மதுரையில் இருந்ததாக மதுரைக் காஞ்சி கூறுகிறது. (பழந்தமிழர் கட்டடக்கலையும் நகரமைப்பும், நா. பார்த்தசாரதி).
வாஸ்து சாஸ்திரம் பற்றி தமிழகத்தின் மிகச் சிறந்த சிற்பக் கலைஞர்களில் ஒருவரான திரு. வை. கணபதி ஸ்தபதி அவர்கள் தினமணி பொங்கல் மலர் 98 - இக்கு அளித்த பேட்டியிலிருந்து..
கேள்வி: சிற்பக் கலை, கட்டிடக் கலைக்க அடிப்படையான வாஸ்து சாஸ்திரம் சம்ஸ்கிருதத்திலேதானே இருக்கிறது?
விடை:அங்குதான் தவறு செய்கிறீர்கள். அவை சம்ஸ்கிருத லிபியில் எழுதப்பட்டவையே தவிர, சம்ஸ்கிருதம் அல்ல. அந்தச் சூத்திரங்களை சொன்னால் சம்ஸ்கிருதம் படித்தவர் அதைப் புரிந்து கொள்ள முடியாமல் திணறுவார். நான் சம்ஸ்கிரும் படித்தவன். நான் சொல்கி¼ன் அது சம்ஸ்கிருதம் அல்ல. இங்குள்ள கோயில்கள் ஏன் வடநாட்டில் இல்லை. இங்குள்ள வீகளின் அமைப்புகள் ஏன் வட இந்தியாவில் இல்லை? வட நாட்டவர் இது நம்முடையது இல்லை என்று ஒதுக்கி விட்டனர். நம்மவர்களும் உண்மை புரியாமல் ஒதுங்கி விட்டனர். வாஸ்து சாஸ்திரம் நம்முடைய சாஸ்திரம்.
சித்த மருத்துவமும் ஜோதிடமும் நம்முடைய தமிழ்ச்சித்தர்களுடன் ஒன்றுக்கொன்று பிணைந்து காணப்படுவன. தமிழ்ச்சித்தர்கள் என்றாலே நாடி ஜோதிடம், சித்த மருத்துவம், மூலிகைகைள் மற்றும் ஐந்திரத்தை (பஞ்சாங்கத்தை) நான் மீன் கோள் மீனைப் பார்த்து பருவங்களையும் காற்றையும் மழையையும் கனித்துச் சொல்லும் வழக்கமும் நமது பண்டைய தமிழ் மரபாகும்.
முடிவுரை:
பார்ப்பானுக்கு மூத்தப் பறையன், கேட்பாரின்றி கீழ்ச்சாதியானான் என்ற பழமொழிப்படி வள்ளுவம் என்ற சாதியினர் மேற் கொண்ட பூசாரியத்தை தம் வயமாக்கிக் கொண்ட பின்னர், தவ வாழ்க்கையை மேற்கொண்டிருந்த அந்தணர் என்னும் நல்ல பட்டத்தையும் போலியாக சூட்டிக் கொண்டனர் ஆரியப் பார்ப்பனர்கள்.
வள்ளுவக் கணியர்கள் வடித்துத் தந்த வானியல் ‡ கணிய உருவகங்களான புராணக் கட்டுக்கதைகளை சரியாகப் புரிந்து கொள்ளாமல் அவற்றிற்கு வழிபாட்டு வடிவம் தந்து சடங்குகளை ஆக்கினர்.
மதச் சண்டைகளுக்கும் சாதி வேற்றுமைக் கலகங்களுக்கும் பல்குதற்கு ஒரு பெருங்கருவியாய் இருந்ததுவும் இருப்பதுவும் சமஸ்கிருத மொழியே யாகும் என்னம் சமஸ்கிருத மொழி நூல்கள் தொலை போகுமானால் இப்போராட்டங்களுந் தொலைந்து போகும்.
முற்றும்.
No comments:
Post a Comment