Sunday, December 22, 2019

தேவநேயப் பாவாணர் பற்றியக் குறிப்புகள்:


தேவநேயப் பாவாணர் பற்றியக் குறிப்புகள்

பெற்றோர் : ஞானமுத்து- பரிபூரணம்
பிறந்தநாள் : 7.2.1902 சங்கரன் கோயில்

வடஆற்காடு மாவட்டம் ஆற்காட்டில் பாவாணருடைய அக்கா இருந்தார்

தொடக்கக் கல்வி சியோன் மலை என்ற முறம்பு
யங் துரை நிர்வகித்தார். முத்துசாமி ஆசிரியராக இருந்தார்.

ஆம்பூர் நடுநிலைப் பள்ளியில் படித்தார்

பாளையங்கோட்டை உயர்நிலைப் பள்ளியில் படித்தார்

தான் தொடக்கக் கல்வி பயின்ற சியோன் மலை பள்ளியில் 16 ருபாய் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தார் பாவாணர். ஆறாம் வகுப்பு ஆசிரியராக யங் துரை இருந்தார்.

ஆம்பூர் பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றினார்.  பாளையங்கோட்டை தமிழாசிரியர் பண்டிதர் மாசிலாமணி அவர்கள் தேவநேசன் கவிவாணன் என்று அழைத்தார்.

மதுரை தமிழ்ச் சங்கத்தில் பண்டிதர் பட்டம் பெற்றார்.

திருச்சி பிசப்பு நாடார் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார்.
1940 இல் ஒப்பியன் மொழி நூல், இந்தி பொது மொழியா? என்று இரண்டு நூல்களை எழுதினார்.

திராவிட மரபு தோன்றி இடம் குமரி நாடே என்னும் இடுநூலை (Thesis) M.O.L. தேர்வுக்காக பல்கலைக் கழகத்தில் ஒப்படைத்தார். பல்கலைக் கழகத்தால் ஏற்கப்படவில்லை.

No comments:

Post a Comment