Monday, December 30, 2019

மலாயாவில் நகரத்தார்களின் தெய்வத் திருப்பணி: முருகு சுப்பிரமணியன்,

மலாயாவில் நகரத்தார்களின் தெய்வத் திருப்பணி
முருகு சுப்பிரமணியன், 
ஆசிரியர், தமிழ்நேசன், மலாயா

மலாயா இன்று உலக நாடுகளிடையே செல்வ நிலையில ஓங்கி நிற்பதற்கு மூலகாரணம் ரப்பர். ரப்பர் மரங்களில் பால் வடித்து அவற்றைப் பனங்காய்க்கும் மரங்களாக விளங்கச் செய்யும் மகத்துவம் தமிழ்ப் பட்டாளிகளுக்கு உண்டென்றால் ஆதியில் ரப்பர்த் தோட்டங்களைப் பயிர் செய்ய மூலதனம் கொடுத்த பெருமை புகழ்படைத்த தமிழ் வணிகர்களான தனவணிகர்களையே சாரும்.

‘திரைகடலோடியும் திரவியம் தேடு’ என்னும் பழமொழிக்கு முழுமையான இலக்கியமாகக் காட்சியளிக்கும் செட்டியார் சமூகத்தினர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே முத்து முதலியன கொண்டு பாய்மரக் கப்பலில் வந்திருக்கின்றனர். சரித்திரங்களும் இலக்கியங்களும் உறுதிப்படுத்தும் செய்தி இது. ஆதிநாளில் இவர்களில் ஒருவரான ‘சந்திரதத்தன்’ என்பார் தம் சொந்த மரக் கலத்தில் மலாயா வந்து காவிரிப்பூம்பட்டினம் திரும்பியதாக மணிமேகலை கூறுகிறது.

ஆனால், செட்டியார்கள் மலாயாவில் ‘கொடுக்கல் வாங்கல்’ ஆரம்பித்து ஏறக்குறைய 150 ஆண்டுகள் ஆகின்றன. மலாக்காவிலேயே அவர்கள் முதன் முதலில் குடியேறினர். பினாங்கு 130 ஆண்டுகளுக்கு முன்னதாகவும், சிங்கப்பூருக்கு 120 ஆண்டுகளுக்கு முன்னதாகவும் செட்டியார்கள் வந்தனர்.
மலாக்காவில் ஆங்கிலேயர்களுக்குச் சொந்தமான ஒரு சில தோட்டங்கள் நீங்கலாக மற்றத் தோட்டங்கள் எல்லாம் செட்டியார்களிடமிருந்து பணம் பெற்றுப் பயிர் செய்யுப் பட்டவையே. அந்நகரை அலங்கரிக்கும் கட்டிடங்களில் பெரும் பான்மை இவர்களின் பணத்தால் கட்டியனவாகவே இருக்கும்.
மலாக்காவில் தன் சேயான் என்னும் சீனத்தவக்கை மேனாட்டிலிருந்து ரப்பர்க் கொட்டைகளை வரவழைத்துப் புக்கேலிந்தான் என்னும் இடத்தில் முதன் முதலில் ரப்பர்த் தோட்டம் போட்டார். அவருக்குப் பண உதவி செய்தவர்கள் நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள்.

மலாயாவில் செட்டியார்கள் போட்டிருக்கும் மூலதனம் தற்சமயம் 20 கோடி வெள்ளிக்கு மேல் இருக்குமென்று மதிப்பிடப்படுகிறது.

‘இந்நாட்டில் இப்போதுள்ள பெருத்த பணக்காரர்கள் என்று கூறக்கூடிய சீன முதலாளிகள், தோட்டச் சொந்தக்காரர்கள், ஈயச் சுரங்க அதிபர்கள், மற்றும் பெரும் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. வாகனங்கள், ரதங்கள், நகைகள் மற்றும் கோவில் தளவாடங்களுக்கும் குறைவில்லை. மிகவும் பூரணமாகக் கோவில் காரியங்கள் நடந்து வருகின்றன.

மலாயாவில் சைவம் தழைப்பதற்கு நிலைக்களனாக விளங்குபவை நகரத்தார்களின் கோயில்களே. தமிழ்ப் பண்பாட்டின் இருப்பிடமாகவும் அவை திகழ்கின்றன. கூட்டங்கள் முதலியன நடத்தவும், திருமணம் முதலிய பொது நிகழ்ச்சிகளை நடத்தவும் இக் கோயில்கள் பெரிதும் பயன்படுகின்றன.
ஊர் வாரியாக நகரத்தார்களின் கோவில்களும் அவற்றின் திருவிழாக்களும் வருமாறு :

1.அலோஸ்டார் தண்டாயுதபாணி கோவில் - மாசிமகம்
2. கூலிம் தண்டாயுதபாணி கோவில்                 - தைப்பூசம்
3.பினாங்கு தண்டாயுதபாணி கோவிலும்
சிவன் கோவிலும்                                         - தைப்பூசம்
4.வாலப்பூர் தண்டாயுதபாணி கோவில்         - வைகாசி விசாகம்
5.சுங்குரும்பை தண்டாயுதபாணி கோவில்         - பங்குனி உத்திரம்
6.தைப்பிங் தண்டாயுதபாணி கோவில்                 - ஆடிவேல்
7.ஈப்போ தண்டாயுதபாணி கோவில்                 - வைகாசி விசாகம்
8.தெலுக்கான்சன் தண்டாயுதபாணி கோவில் - சித்திரா பெளர்ணமி
9.கோலாலம்பூர் தண்டாயுதபாணி கோவில் - பங்குனி உத்திரம்
10.கிள்ளான் தண்டாயுதபாணி கோவில்         - திருக் கார்த்திகை
11.சாவி ( நிபோங் திபால்)பாரிட் புத்தார்
நகரத்தார் நிர்வாகம்
        தண்டாயுதபாணி கோவில்                                - சித்திரா பெளர்ணமி
12.சிரம்பான் செல்வ விநாயகர் கோபில்                - ஆவணி விநாயக                                                                    சதுர்த்தி
13.மலாக்கா பொய்யாத விநாயகர் கோவிலும்
சன்னாசி மலை தண்டாயுதபாணி
கோவிலும்                                                         - மாசிமகம்
14. மூவார் தண்டாயுதபாணி கோவில்                 - திருக்கார்த்திகை
15. பத்துபகாட் தண்டாயுதபாணி கோவில்
16. சிங்கப்பூர் தண்டாயுதபாணி கோவில்        - தைப்பூசம்
17. தாப்பா தண்டாயுதபாணி கோவில்

மலாக்காவில் உள்ள பொய்யாத விநாயகர் கோவில் மலாயாவிலேயே மிகப் பழமையானது. மலாக்காச் செட்டியார்கள் டச்சுக்காரரிடம் நிலம் பெற்று 1781 இல் கட்டி முடித்தது அந்த ஆலயம். அதனை மலாக்காச் செட்டியார்கள் நாட்டுக் கோட்டைச் செட்டியார்களிடம் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்படைத்தனர். அது முதல் மலாக்கா நகரத்தார்களின் நிர்வாகத்தில் பொய்யாத விநாயகர் கோவில் நடைபெற்று வருகிறது. இவ்வாறு செட்டியார்கள் ஏற்று நடத்திவரும் கோவில்களும் மலாயாவில் பல உண்டு.
மலாயாவில் நகரத்தார் சமூகம் ஆற்றிவரும் தெய்வத் திருப்பணி சைவ சமய வரலாற்றில் எப்பொழுதும் ஒளி வீசித் திகழும்.

No comments:

Post a Comment