Sunday, December 22, 2019

கம்போடியா நினைவுகள் -நரசய்யா

கம்போடியா நினைவுகள் 
- நரசய்யா 
- தமிழ் மரபு அறக்கட்டளை சொற்பொழிவு

கம்பூசியா என்பது கம்போடியா என்று அழைக்கப்படுகிறது.

பரப்பளவு 1,81,035 சதுர மைல்கள்

கெம்பவ் ஸ்வாயம்பூவ என்ற பனராஸ் பார்ப்பனரால் கம்பூசியா தோற்றுவிக்கப்பட்டது.

நாடு முழுவதும் நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருந்ததால் அதில் பாதிக்கப்பட்ட பெரும்பாலோர் உடல் ஊனமுற்றவர்களாக இருந்தார்கள்.

உலக வங்கியின் சார்பாக வேலைக்கமர்த்தப்பட்டார் நரசய்யா.

கம்போடியா மன்னன் விருந்தில் இராமாயண காப்பிய நாடகம் நடத்தப்படுகிறது.

விருந்துக்கு அதிகமாக செலவு செய்கிறார்கள்.

அன்னாசி பழத்தில் உள்ளே உள்ளவற்றை எடுத்துவிட்டு அதை கூடாக வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கும் அளவுக்கு ஆடம்பரமாக செலவு செய்தனர்.

ஆடம்பர உணவு வகைகள் பரிமாறப்பட்டன. பெருமளவில் உணவு பண்டங்களை வீணாக்கினர்.

கம்போடிய பெண்கள் கடுமையான உழைப்பாளிகள்.

பணம் கொடுத்தால் கண்ணில் ஒற்றிக் கொள்ளும் பழக்கம் பெண்களிடம் உண்டு.

சியாம் ரீப் 

நுழைவு நகரமாக உள்ளது.

டோன்லா சோ என்ற ஏரி உள்ளது.  கோடைக் காலங்களில 120 சதுர மைல் கொள்ளவும் மழைக் காலங்களில் 310 சதுர மைல் கொள்ளவும் நீரைக் கொண்டது.

1000 கோயில்கள் ஒரே வளாகத்தில் உள்ளன.

நாம்பென் என்ற நகரம் 

200 கி.மீ. தொலைவில் உள்ளது.

போல்பாட் ஆட்சி செய்த காலங்களில் படித்தவர்கள் என்றால் சுட்டு கொன்றுவிடுவார்கள்.

1113 முதல் 1150 ஆண்டுகளில் சூரிய வர்மன் 37 ஆண்டுகள் ஆட்சி செய்தான்.

கம்போடிய மக்களின் பெயர்களில் ‘ரத்னா’ என்பது முன் ஒட்டாகவோ பின் ஒட்டாகவோ இருக்கும்.

எல்லா இடங்களிலும் புத்தர் சிலையை ஒளித்து (புதைத்து ) வைத்திருப்பார்கள்.

அங்கோர்வார்ட் கோயில்கள்

14.5 மீட்டர் உயரம், 1025 மீட்டர் நீளம், 802 மீட்டர் அகலம் உடையது.

சுற்றி அகழி காணப்படுகிறது. கோயில்களின் சுவர்களில் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. குடைவரை சித்தரம் 6 உள்ளது.

வலது பக்கச் சுவர்களில் குருசேத்திர போர், இடது பக்கச் சுவர்களில் ஸ்ரீலங்கா யாத்திரி, பாற்கடல் கடையும் கதை போன்றவை காணப்படுகின்றன.

கம்பூசியாவில் பால் கடையும் போது எடுக்கப்பட்ட பாலை பிள்ளையார் திருடிக் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள திருக்கடையூர் என்ற இடத்திற்கு போய்விட்டார். இன்றும் திருக்கடையூரில் கள்ளப் பிள்ளையார் என்ற பிள்ளையார் உண்டு.

கிருஷ்ணர் கோவர்த்தன மலையை தூக்கும் காட்சிகள் காணப்படுகின்றன.

பிரஞ்ச் மக்கள் ஆதிக்கம்

வருணன் என்பதுதான் மணிமேகலை என்று மாறிவிட்டது.

கம்போடிய பெண்கள் மங்கோலியர் மாதிரி இருப்பார்கள். வயதைக் கண்டுபிடிக்க முடியாது.

No comments:

Post a Comment